மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்
மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் (Central Marine Fisheries Research Institute - CMFRI)
இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1967 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது.
இதன் தலைமையகம் தற்போது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தில் இயங்கிவருகிறது. இது
1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டதாகும். இது கடல் மீன் வள ஆய்வில் தனக்கென பல வளர்ச்சிகளை உலகளவில் எட்டியுள்ளது

மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இந்திய மத்திய கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல மையம் மண்டபத்தில் அமைந்துள்ளது. இம்மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஒரு கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தக் கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகத்தில், ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
Comments
Post a Comment