தனுஷ்கோடி
(Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில்
உள்ள ஊர். இது பாம்பனுக்கு
தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ.,
தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம்
புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
வில்லைப்
போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால்
இதனைத் தனுஷ்கோடி என்றனர். இது சங்க காலத்துக்குப்
பிந்திய வழக்கு. (வில் = தனுஷ்)
கோடி என்பது முனை. வானைத்
தொடும் முனை 'கோடு'. அதுபோலக்
கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் 'கோடி'
'கோடி'
என்பது இதன் சங்க காலப்
பெயர். 'தொன்முது கோடி' என்று அது
சிறப்பிக்கப்பட்டுள்ளது
1964 ஆம்
ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில்
ஏற்பட்ட புயல் கரையை கடந்த
போது ராட்சத அலைகள் எழுந்து
ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய
கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது.
இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று
கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும்
கொல்லப்பட்டனர்.[4] அதிகாலையில் நடந்த இந்த கோர
தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.
அதன் பின்னர் தமிழக அரசு
இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக
அறிவித்தது. தற்போது புதிய தனுஷ்கோடி
உருவாக்கப்படுகிறது.
தனுஷ்கோடியில்
அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்
புயல் வந்து புரட்டிப் போட்டதன்
அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த
ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே.
இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ
குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை
நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது,
சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால்
உள்ளிட்டவற்றை
செய்து
வருகின்றனர். தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல்
கொண்டது. ரயில் தண்டவாளம், பாதி
கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.
Comments
Post a Comment